திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்த முதல்வர் - ஆடிப்போன மருத்துவர்கள்.. அடுத்து நடந்த பரபரப்பு

x

முதலமைச்சரின் திடீர் ஆய்வால், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்றபின், முதல​மைச்சர் ஸ்டாலின் பெரியமிளகுபாறையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்திற்கு சென்றார். அங்கு, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற அவர், செவிலியர்களிடம் கலந்துரையாடினார். பின்னர், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து இருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவமனை டீன்னிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்