உயர்கல்வித்துறை சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்

x

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உயர் கல்வித்துறை சார்பில், பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார் அதன் நேரலை காட்சிகளை தற்போது காணலாம்...

உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்

ஆகியவற்றில் 87 கோடியே 76 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், விடுதிகள், ஆராய்ச்சி மையம், கருத்தரங்குக்கூடம் மற்றும் செய்கலைஞர் ஆய்வுக்கூடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்பு.


Next Story

மேலும் செய்திகள்