வசமாக சிக்கிய `கோழி திருடன்' - விசாரணையில் வெளியான பகீர் தகவல்

x

நாகை வேளாங்கண்ணி அடுத்த பூவைத்தேடி பேருந்து நிலையம் எதிரே கோழிக்கடையில் கோழிகளைத் திருட முயன்ற வடமாநில இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது..

ஆறுமுகம் என்பவரின் கோழிக்கடைக்குள் ஆள் இல்லா நேரம் பார்த்து புகுந்த வடமாநில இளைஞர் கோழிகளைத் திருட முயன்றுள்ளார்... இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இளைஞரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்... சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருடனை விடுவித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்... காவல் துறை விசாரணையில் அந்த இளைஞர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பவன் என்பதும், சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றதும் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்