ரோடு தெரியாத அளவுக்கு போதை... மின்னல் வேகத்தில் பறந்து வந்த கார் - ஓரம் இருந்த பெண்களை நசுக்கி...

x

விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் கிராமத்திலுள்ள தோட்டத்தில், முருகநேரியை சேர்ந்த 10க்கு மேற்பட்ட பெண்கள், விவசாய வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். பணி முடிந்த பின்னர் அவர்கள், சாலையோர பாலத்தின் மீது அமர்ந்திருந்தனர். அப்போது அப்பகுதியே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, பெண்கள் மீது மோதியது. இதில், இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில், நான்கு பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மதுபோதையில் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய ராஜ்குமார் என்பவரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்