பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சிட்டாக பறந்த கார்.. பரபரப்பு சிசிடிவி காட்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் இளங்காடு பகுதியில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இளங்காடு கூட்டுச்சாலை அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்நிலையில், இரவு நேரத்தில் ஆந்திர மாநிலம் பதிவு கொண்ட காரில் வந்த நபர், டீசல் நிரப்பி விட்டு பணம் தராமல் திடீரென மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் மேலாளர் பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்