ஆசை ஆசையாய் அக்காவை அழைக்க சென்ற குழந்தை - தாயின் கண் முன்னால் நடந்த கொடூரம்

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

எம்.அய்யம்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன்-சாந்தி தம்பதியினரின் 4 வயதுடைய பெண் குழந்தை, மள்ளப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளியை முடித்து விட்டு, வாகனத்தில் வீடு திரும்பிய அவரை அழைப்பதற்காக, தாய் சாந்தி, தனது ஒன்றரை வயது குழந்தை கிஷோருடன் சென்றுள்ளார். அப்போது, ஓட்டுநர் அந்த பெண் குழந்தையை இறக்கி விட்டு வேனை இயக்கிய போது, அதன் அருகில் நின்றிருந்த ஒன்றரை வயது குழந்தை கிஷோர், எதிர்பாராதவிதமாக வேன் சக்கரத்தில் சிக்கி பரிதாபாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....



Next Story

மேலும் செய்திகள்