கர்ப்பிணியை பூரி கட்டையால் அடித்து கொன்ற கொடூர கணவன் திருப்பூரில் அதிபயங்கரம்

x

திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன் பூண்டி நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருபவர் அணில் பவார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவருக்கு, ரேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்துள்ளனர். அம்மாபாளையம் கணபதி நகர் பகுதியில் அணில் பவார் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அவரின் மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்திருக்கிறார். இந்நிலையில், மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்த அணில் பவார், சம்பவத்தன்று மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கொன்று, குழந்தைகளுடன் தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், அணில் பவாரின் நண்பர்கள் மூலம், கரூர் தப்பிச் சென்ற அவரை சுற்றி வளைத்து கைது செய்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்