`சீறிப்பாய்ந்த கார்'...மடக்கி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த ஷாக்

x

சென்னை மடிப்பாக்கம் கைவேலி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற இரண்டு கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவற்றில் மூட்டை, முட்டையாக 303 கிலோ கஞ்சா மற்றும் 3 வீச்சரிவாள் ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த சென்னையை அடுத்த விஜயநல்லூரை சேர்ந்த ரஞ்சன் கிஷோர்குமார், செங்கல்பட்டு அசோக், இரும்புலியூரை சேர்ந்த உதயகுமார் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரஞ்சன் கிஷோர்குமார் மடிப்பாக்கம் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேட்டு குற்றவாளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசார்ணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்