பணத்திற்காக விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சிறுவர்கள்

x

பணத்திற்காக விவசாயியை அடித்துக் கொலை செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயம் செய்து வரும் இவர், இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தரகராகவும் வேலை பார்த்து வருகிறார். இந்த வேலையின் போது, அருகே உள்ள ஊரை சேர்ந்த இரு சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகேசனிடம் பணம் அதிகம் புழங்குவதைக் கண்ட சிறுவர்கள், அவரை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிறுவர்கள் முருகேசனை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துவிட்டு, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்துவழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவர்கள் இருவரையும் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்