திடீரென குறுக்கே வந்த பைக்...சுதாரிப்பதற்குள் அடித்து தூக்கிய லாரி துடித்த உயிர்கள்.. சாலையெங்கும்..

x

திடீரென குறுக்கே வந்த பைக்

சுதாரிப்பதற்குள் அடித்து தூக்கிய லாரி

துடித்த உயிர்கள்.. சாலையெங்கும் ரத்த வெள்ளம்

கடலூர் அருகே உள்ள காராமணி குப்பத்தை சேர்ந்த ரவி என்பவர், தனது மனைவி சரஸ்வதியுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, சண்முகம் என்பவரது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். கடலூர் குண்டு சாலை பகுதியில் வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த 2 சக்கர வாகனங்களுக்காக, ஆட்டோ ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால், நிலை தடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. அப்போது, புதுச்சேரியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் சண்முகம் மற்றும் ஆட்டோவில் பயணித்த ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்