மூத்த மகன் செய்த செயல் - போலீஸ் எடுத்த அதிரடி ஆக்சன் - கையெடுத்து கும்பிட்ட பெரியவர் - சென்னையில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

x

சென்னை மடிப்பாக்கத்தில் வயதான தம்பதியின் வீட்டிற்கு சென்று, அவர்களது மகனிடம் இருந்த சொத்து ஆவணங்களை போலீசார் பெற்று பெற்றோரிடம் வழங்கினர்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் 6 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தனது மனைவி வள்ளியம்மாள் பெயரில் வைத்துக்கொண்டு, மீதம் உள்ள சொத்துக்களை 3 மகன்கள் மற்றும் ஒரு மகளுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளார். வள்ளியம்மாளின் மருத்துவ செலவுக்கு மாதந்தோறும் அதிக பணம் தேவைப்படுவதால், அவரது பெயரில் உள்ள இடத்தை விற்க முடிவு செய்துள்ளார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த மகன் மகேந்திரன், நிலத்தின் அசல் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றார். பலமுறை கேட்டும் கொடுக்காத‌தால், காவல் ஆணையரிடம் கடந்த 23 ஆம் தேதி பார்த்தசாரதி புகார் அளித்திருந்தார். இதையடுத்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். மூத்த மகன் மகேந்திரனிடமும் விசாரணை நடத்தி, ஆவனங்களை ஒப்படைக்க வைத்தனர். அவர்களுக்கு மூத்த தம்பதியர் நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்