குலை நடுங்க வைத்த விபத்து.. `பள்ளித்தில் பஸ்' காதை கிழித்த அலறல் - "மகனுக்காக மாய்ந்த தாய்.."

x

மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சுற்றுலா சென்ற பெண், குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

தென்காசி மாவட்டம் மேல கடையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையா. இவருக்கு பேபி கலா என்ற மனைவியும், பள்ளியில் படிக்கும் இரு மகன்களும் உள்ளனர். இதனிடையே, பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது இளைய மகன் சுற்றுலா செல்ல விரும்பியுள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக குடும்பத்தோடு சுற்றுலா சென்ற நிலையில், பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் பேபி கலா உயிரிழந்த நிலையில், இரு மகன்களும் தாயை இழந்து தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்