ஹோட்டலில் அந்த பூ - இருவர் கைது-போலீஸ் அதிரடி

x

சென்னை அருகே கஞ்சா பூ பதுக்கி வைத்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஹோட்டலில் கஞ்சா பூ பதுக்கி வைத்திருப்பதாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று சோதனை நடத்திய போலீசார், ஓ.ஜி.குஷ் எனப்படும் கஞ்சா பூவை மறைத்து வைத்த இருவரை கைது செய்தனர். ஜொனாதன், ஷா தாஸ் ஆலம், ஆகிய இருவரிடம் இருந்தும், 103 கிராம் எடை கொண்ட கஞ்சா பூ, 4 லட்சத்து 63 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்