அந்த 1 நொடியில் எடுத்த முடிவு..அம்மா இன்றி தவிக்கும் குழந்தைகள்..தவறான பாதையால் தறிகெட்ட குடும்பம்

x

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சிவராஜ் என்பவருக்கு, கவுதமி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளன. சிவராஜ் வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பில் இருப்பதை அறிந்த கவுதமி, கணவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, விரக்தி அடைந்த கவுதமி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலக்கு முயன்றார். அப்போது, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிவராஜ், அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயன்றபோது, அவரது கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி கவுதமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்