மொத்த திருச்சியை பதறவிட்ட...அந்த ஒற்றை ஆடியோ...பின்னணியில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்

x

குழந்தை கடத்தல் கும்பல் ஊருக்குள் நுழைந்திருப்பதாக கூறி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய ஆட்டோ டிரைவரை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, குழுமணி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகா முனி என்பவர், திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊருக்குள் புகுந்திருப்பதாகவும், அவர்கள் குழந்தைகளை தேடிக்கொண்டு தெருவில் உலா வருவதாகவும் கூறி வாட்ஸ் அப் க்ரூப் ஒன்றில் ஆடியோ பதிவிட்ட நிலையில், அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்