மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர் `ஆரூரா… தியாகேசா…’ கோஷமிட்டு வழிபட்ட பக்தர்கள்

x

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆட்சியர் சாருஸ்ரீ, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அங்கு காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஆரூரா...தியாகேசா என கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை இழுத்து செல்கின்றனர். 4 வீதிகளில் ஆடி அசைந்து வரும் ஆழித்தேரின் அழகை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்