முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி மீது நில அபகரிப்பு வழக்கு - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவிலான நிலத்தை மோசடி செய்து அபகரித்த வழக்கில், சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தனது பதவியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் அமுதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இன்று திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமுதாவிற்கு, வரும் 23-ம் தேதி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்