திடீரென இறங்கிய கும்பல் - ஆம்புலன்ஸ் டிரைவர் கண்ணில் குத்தி - வெறி தாக்குதல்

x

குமரி மாவட்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சினு , இவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். பணியில் இருந்த இவரை இருசக்கர வாகனத்தில் கட்டுபாடில்லாமல் வந்த போதை ஆசாமிகள் திடீரென வழிமறித்து சரமாரியாக தாக்கியதோடு கையில் வைத்திருந்த பைக் சாவியை கொண்டு கண்ணில் குத்தி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். காயங்களுடன் இருந்த ஓட்டுநர் தற்போது குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதுக்கடை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்