காலை ஸ்ட்ராங் ரூமில் பணியிலிருந்த போலீஸ் -மாலை எடுத்த விபரீத முடிவு

x

காலை ஸ்ட்ராங் ரூமில் பணியிலிருந்த போலீஸ் -மாலை எடுத்த விபரீத முடிவு

காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை ஆயுதப்படை முதல் நிலை காவலரான சிவசங்கரன், காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். பணி முடிந்து ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு வந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்