மொட்டை மாடியில் செல்போன் பேசிய பள்ளி மாணவர் - மின்சாரம் தாக்கி படுகாயம்

x

சென்னை, திருமுல்லைவாயில் நாகம்மை நகரை சேர்ந்தவர் சந்தோஷம். 17 வயதான இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த சந்தோஷம், அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியால் மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 90 சதவீத தீக்காயத்துடன் மாணவர் உயிருக்கு போராடிக் வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்