ஊராட்சி மன்ற அலுவலகத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் - தவறி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவன்

x

திருப்பத்தூர் மாவட்டம் அழிஞ்சிகுளம் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் யோதிஸ், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக தோண்டப்பட்டு குழிக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் அவரது கால் முறிந்துள்ளது. இதனையடுத்து அவர், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், கால் முறிவு ஏற்பட்டுள்ள யோதிஸை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே யோதிஸ், பொது தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தனக்கு தமிழக அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்