"Do Not Touch" - திடீரென கரை ஒதுங்கிய மர்ம பொருள்... சீர்காழி அருகே அதிர்ச்சி

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒன்றரை அடி நீளமும், 6 இன்ச் விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே அபாயம் - தொட வேண்டாம் என்று எழுதப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவ கிராம மக்கள் இது வெடிக்கக் கூடிய தன்மை உடைய பொருளோ என அச்சம் அடைந்தனர். உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அப்பொருளை ஆய்வு செய்து அதை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்