சக காவலரின் மனைவியை கடத்திச் சென்ற காவலர் - போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

x

பெரம்பலூர் அருகே, எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபாகரன். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த இவர், அருகில் வசித்து வந்த சக காவலரின் மனைவியை மதுபோதையில் தாக்கி கடத்திச் சென்றுள்ளார். தொடர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் இருந்து நூலிழையில் தப்பி வந்த பெண் தன் கணவரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே, சம்பவம் குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், காவலர் பிரபாகரனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்