பள்ளி மாணவர்களுக்கு...கோடை விடுமுறை நீட்டிப்பு?

x

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதாலும், கடும் வெயில் காரணமாகவும், ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதியிலிருந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதால், மாணவர்களுக்கு கூடுதலாக 2 வாரங்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. ஆசிரியர்கள் ஏப்ரல் 23ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியும், மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்