சிறையிலிருந்து வெளி வந்த குற்றவாளி - தேடிவந்து பழி தீர்த்த கொடூரம் வெறி தீர தலையில் வெட்டிய பயங்கரம்

x

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ருத்ரேஷ் மற்றும் ஈஸ்வர் ஆகிய இருவருக்கும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கஞ்சா தொழில் போட்டியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ருத்ரேஷ் கத்தியல் வெட்டியதில், ஈஸ்வரருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ருத்ரேஷ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 15 ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், நெல்லித்தோப்பு பகுதியில் ருத்ரேஷ் நின்று கொண்டிருந்தபோது, அங்கு 2 மோட்டார் சைக்கிளில் தனது கூட்டாளிகளுடன் வந்த ஈஸ்வர், ருத்ரேசை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஈஸ்வர் மற்றும் அவரது நண்பர்களான கவுதம், மற்றும் சின்ன அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 3 கத்திகள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்