மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு - போலீசார் தீவிர விசாரணை

x

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக மேற்கூரை இடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் உயிரிழந்தது மணிப்பூரை சேர்ந்த லாலி, மேக்ஸ் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த சைக்கிலோன் ராஜ் என்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்