சிக்காத சிறுத்தை - காவேரி ஆற்றில் - ஷாக்கில் அதிர்ந்த அதிகாரிகள்

x

மயிலாடுதுறையில் ஆட்டம் காட்டும் சிறுத்தையை பிடிக்கும் பணியில், வனத்துறையினர் 5வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறையில், கடந்த 2 தேதி செம்மங்குளம் பகுதியில், சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்ட நிலையில், வனத்துறையினர் அதனைப் பிடிக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் ஆரோக்கியநாதபுரம், மயிலாடுதுறை ரயில்வே நிலையம், அசிக்காடு, மறையூர், கோவங்குடி, ஊர்க்குடி ஆகிய 6 இடங்களில் 7 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. இதனிடையே, காவிரி ஆற்றில் முடியுடன் கூடிய மலம் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறுத்தை மலம் போன்று இருப்பதால், மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்