"கோவில்பட்டி இளைஞர் சாவில் மர்மம்" உயிரோடு இருக்கும் போது நடந்த சந்திப்பு - திடீர் திருப்பம்.. பகீர் கிளப்பும் உறவினர்கள்

x

கோவில்பட்டி அருகேயுள்ள தீத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். கட்டட தொழிலாளியான இவர், கிராமத்தின் அருகே மர்மமான முறையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சடலத்தின் அருகே மதுபாட்டிலும், விஷ பாட்டிலும் இருந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கரிசல் குளத்தை சேர்ந்த பெண் ஒருவரை வெங்கடேஸ்வரன் காதலித்து வந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு அப்பெண்ணின் உறவினர்கள் வெங்கடேஸ்வரனை எச்சரிக்கை செய்ததாகவும் குற்றம் சுமத்திய உறவினர்கள், வெங்கடேஸ்வரனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை எற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்