கவுன்சிலர் செய்த மோசடி - நடுரோட்டில் கண்ணீர் விடும் குடும்பம் - கோவையில் பரபரப்பு

x

கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், லதா தம்பதியினர், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டி திருமகன் என்பவரை அணுகியுள்ளனர். அப்போது, 74வது வார்டு கவுன்சிலர் மூலம் வீடு பெற்று தருவதாக கூறிய திருமகன், அதற்காக சுமார் ஒரு லட்ச ரூபாயை கொடுக்க வேண்டும் என, அந்த தம்பதியிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய தம்பதி, கவுன்சிலர் சங்கரிடம் திருமகன் முன்னிலையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வீடு எதுவும் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட தம்பதி மாநகராட்சி ஆணையரிடம், பணத்தை மீட்டு தரக் கோரி புகார் அளித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்