மாடு வியாபாரியை...சுத்தலில் விட்ட பறக்கும் படை...கால் கடுக்க புலம்பும் பாதிக்கப்பட்டவர்

x

மாடு வியாபாரம் செய்யும் வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 65 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்த நிலையில், பணத்தைத் திரும்பப் பெற வியாபாரி ஆட்சியர் அலுவலகத்தில் கால் கடுக்கக் காத்திருக்கிறார். கன்னியாகுமரி சேரமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் நெல்லை வள்ளியூரில் மாடு வாங்குவதற்காக 65 ஆயிரம் ரூபாய் பணத்துடன் புறப்பட்டார். இரணியல் பகுதியில் வாகனங்களை சோதனையிட்டு கொண்டிருந்த பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவரிடம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று புலம்பும் கண்ணன் தக்கலையில் தாலுகா அலுவலகம், நாகர்கோயிலில் ஆட்சியர் அலுவலகம் என ஒவ்வொரு அலுவலகமாக பணத்தைத் திரும்பப் பெற அலைந்து கொண்டிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்