சிறுமியை கடித்து குதறிய நாய்...பெரும் அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்...

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கோட்டை காலனி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி தீபிகாவை நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த அச்சிறுமியை அங்கிருந்த ஒரு பெண் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிகப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சுற்றி திரியும் ஏராளமான தெருநாய்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்