மாற்றுத்திறனாளிக்கு பாலியல் சீண்டல் - காவல்துறையில் புகார் கொடுத்த கணவன்- கத்தியால் குத்திய கொடூரன்

x

மாற்றுத்திறனாளிக்கு பாலியல் சீண்டல் - காவல்துறையில் புகார் கொடுத்த கணவன்- கத்தியால் குத்திய கொடூரன்

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு, வாய் பேச முடியாத மனைவி மற்றும் 5 வயதில் மகள் உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த மாரிமுத்துவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தனது வாய் பேச முடியாத மனைவியை தகாத வார்த்தைகளில் பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், வினோத் மீத வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாரிமுத்து குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தபோது, ஐந்து கடை அருகே மறைந்திருந்த வினோத், அவரை கத்தியால் குத்தினார். இதில் குடல் சரிந்ததில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தப்பியோடிய வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்