சென்னையில் மீண்டும் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

x

தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 தினங்கள் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்