சென்னை கடல் அலையில் சிக்கி 2 இளைஞர்கள் பலி | குளிக்க சென்ற இடத்தில் விபரீதம்

x

ஈஞ்சம்பாக்கம் நஞ்சுண்டார் சாலையில் உள்ள கடற்கரையில் வேளச்சேரியை சேர்ந்த மகேஷ், வருண் குமார், ரவி ஆகிய மூவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் அலையில் சிக்கி மகேஷ் மற்றும் வருண் குமார் ஆகியோர் மூச்சு திணறி பலியாகினர். ரவியை மட்டும் அருகில் இருந்த நபர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்