அண்ணன் இறந்த துக்கத்தில் இதயம் அடைத்து தங்கச்சி மரணம்.. உடல் மீதே பிரிந்த உயிர்.. மதுரையில் சோகம்

x

#madurai #brothersister

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளத்துப்பட்டியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் பிச்சை, மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். நக்கலப்பட்டியில் வசித்து வரும் பிச்சையின் சித்தப்பா மகளான தங்கம்மாள், சகோதரரிரன் இறப்பு செய்தி கேட்டு, குளத்துப்பட்டிக்கு வந்துள்ளார். அண்ணன் பிச்சையின் உடலைப் பார்த்து கதறி அழுத தங்கம்மாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, தங்கம்மாள் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அண்ணனின் இறப்பால், தங்கையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்