தென்காசியில் இளைஞரை கீழே தள்ளி நெஞ்சில் ஏறி மிதித்த போலீஸ் - பதற வைக்கும் அதிர்ச்சி காட்சிகள்

x

தென்காசியில், இளைஞர் ஒருவரை காவலர் அடித்து நெஞ்சில் மிதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களின் இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, போலீசார் இளைஞர்களில் ஒருவரை கீழே தள்ளி நெஞ்சில் மிதித்ததால் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் அடிபட்ட அந்த இளைஞர், மருத்துவமனையில் சேர்க்கும் முன், காவலர்கள் தன்னை தாக்கியதாக பேசிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்