காதல் திருமணம் செய்த இளைஞரின் சித்தப்பாவுக்கு விழுந்த அரிவாள் வெட்டு -

x

காதல் திருமணம் செய்த இளைஞரின் சித்தப்பாவுக்கு விழுந்த அரிவாள் வெட்டு - பெண்ணின் தாய்மாமா வெறிச்செயல்.. தென்காசியில் அதிர்ச்சி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்த இளைஞரை பழிவாங்கும் நடவடிக்கையாக அவரின் சித்தப்பாவை பெண்ணின் தாய்மாமா அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கோட்டை அருகேயுள்ள திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்பாபு. இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீனாட்சி புரத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணத்திற்கு ஆதரவளித்ததாக கூறி இளைஞரின் சித்தப்பா கந்தசாமி ராஜா மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். கந்தசாமி ராஜாவை பெண்ணின் தாய் மாமாவான அகம்மதுகான் அடிக்கடி செல்போனில் மிரட்டி வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 7 ஆம் தேதி தன் உறவினருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த கந்தசாமியை அகம்மதுகான் மற்றும் அவர் நண்பர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயத்துடன் உயிர்தப்பிய கந்தசாமியும், அவரது உறவினரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது வரை புகாரளித்தும் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தங்களை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதிலே போலீசார் மும்முரம் காட்டி வருவதாகவும் கந்தசாமி குற்றம் சுமத்தியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்