சுவற்றில் தெறித்த ரத்தம்... மண்வெட்டியால் கணவன் கதையை முடித்த மனைவி

x

தென்காசி மாவட்டம் வேட்டரம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜு, தனது மனைவி கலைச்செல்வியுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான ராஜு, தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி மண்வெட்டியால் கணவரை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும், அதனை ஊர் மக்களிடம் அவரே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தகவலின்பேரில் விரைந்த போலீசார், ராஜுவின் உடலை கைப்பற்றி கலைச்செல்வியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்