தற்காலிக பேருந்து நிறுத்தம் விவகாரம் - மாறி மாறி வசை பாடிய கவுன்சிலர்கள்

x

தருமபுரி மாவட்டம், அரூரில் தற்காலிக பேருந்து நிறுத்தம் தொடர்பாக இரு கட்சி கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரூரில் கட்டுமானப் பணிகளுக்காக பேருந்து நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள், அங்கும் பேருந்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக கவுன்சிலர்கள், திமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதம் செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்