கசாப்பு கடையில் கோயில் காளை.. "புஸ்பா" மீது கொலை வெறியில் ஒரு ஊர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

x

அகரம் அருகேயுள்ள குடிமேனஹள்ளியில் உள்ள பெருமாள் கோயிலின் காளை 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. விசாரணையில், ஊத்தங்கரையை அடுத்த ரெட்டிபட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் டெம்போவை வாடகைக்கு எடுத்து காளையை கடத்தியது தெரிய வந்த‌து. இதையடுத்து, கிராம மக்கள் புகார் அளித்த‌தால், தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். காளையை கடத்திய புஸ்பராஜ் என்பவரை கைது செய்த காவல்துறையினர், கேரளா சென்று கசாப்பு கடைக்கு விற்கப்பட்ட காளையை மீட்டு கொண்டு வந்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் டிஎஸ்பிக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். மேலும், காளையை ஆற்றில் குளிப்பாட்டி அலங்கரித்து பூஜை செய்து, மேள தாளங்கள், பம்பை வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, திருவிழா போன்று இளைஞர்கள் நடனமாடி காளையை உற்சாகமாக வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்