ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது - சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு | TN School

x

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், குழந்தைகள் தங்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், 'அரும்பு', 'மொட்டு', 'மலர்' ஆகிய ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்ற அறிவுறுத்தல்களை பெறுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். வகுப்பறைச் சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தமின்றியும் இருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர், படைப்பாற்றலும், திறமைகளும் ஊக்குவிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார். ஆட்சியர்களின் ஆய்வு ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது, ஊக்குவிக்கும் விதமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ள அவர், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளையும், சுகாதார திட்டங்களையும் உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்