ஆசிரியர் தொகுதி காலி இடத்தை நிரப்பும் தேர்தல்...பெரியார் பல்கலை.யில் நடைபெறும் பேரவை கூட்டம்

x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பேரவை கூட்டத்துடன், ஆசிரியர் தொகுதி காலி இடத்தை நிரப்பும் தேர்தலும் நடத்துவது, கண்டனத்துக்குரியது என்று, அந்த பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதில், மரபுகளை மாற்றி தேர்தல் நடைபெறும் நாளிலேயே, பொருள் நிரல்களுடன் கூடிய பேரவை கூட்டத்தையும் கூட்டுவதன் மூலம், பேரவை கூட்டத்தையும், தேர்தலையும் நீர்த்துப்போக செய்யும் தந்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்கலைக்கழகமே தலைகுனியும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், அனைத்தையும் இருட்டடிப்பு செய்திடவும், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள ஏதுவான செயல்களை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமோ, என்ற சந்தேகத்தை எழுப்புகிறது, என்றும் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்