13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

x

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கருணாகரன். இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மகளிர் போலீசாருடன் சென்ற அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மூன்றாம் வகுப்பு மாணவிகள் 8 பேரிடமும், நான்காம் வகுப்பு மாணவிகள் 5 பேரிடமும் ஆசிரியர் கருணாகரன் கடந்த நான்கு மாதங்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. உடனே கருணாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்