ஒரு வேளை சாப்பாட்டுக்காக ஆசிரியர்களுக்கு நடந்த அவலம்.. சேலத்தில் அதிர்ச்சி

x

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாதையன் குட்டையில் உள்ள தனியார் பள்ளியில், தபால் வாக்கு செலுத்த வந்த ஆசிரியர்களுக்கு மதிய உணவு வழங்கிய போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 1,600 ஆசிரியர்கள், தபால் வாக்கு செலுத்திய நிலையில், அவர்களுக்கு வருவாய்த் துறை சார்பில் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உணவு

மற்றும் குடிநீர் வழங்க முறையான ஏற்பாடு செய்யப்படாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் உணவு அருந்த போதிய இடவசதி ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்