கண்மாயில் கிடந்த டீ கடைக்காரர்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

மதுரை சோழவந்தான் அருகே உள்ள நடுமுதலைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் அந்த பகுதியில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்தார். வழக்கம்போல் கடையை திறக்க சென்ற கருப்பையாவை இடையில் வழிமறித்த மர்மகும்பல் ஒன்று, அவரை ஆட்டோவில் கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது. பின்னர், பன்னியான் என்ற கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில், அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கருப்பையா சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்