மதுப்பிரியர்கள் நெஞ்சில் ஈட்டியை இறக்கும் சேதி.. 4 நாட்கள் டாஸ்மாக் மூட உத்தரவு

x

வாக்குப்பதிவு முடியும் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுபான கடைகள் மூடப்பட உள்ளது. இதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 ஆம் தேதியும் மதுபான கடைகள் மூடப்படும். தமிழகத்தில் இதற்கான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்