கட்டிங் கேட்டு தகராறு - ராவான ரவுடியின் வெறிச்செயல் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

ஓமலூர் அருகே, டாஸ்மாக் மது பாரில் மது குடிப்பவர்களிடம் குவாட்டர் கட்டிங் கேட்டு ரவுடிகள் தகராறு செய்யும் சிசிடிவி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. காமலாபுரம் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடை பாரில் நுழைந்த ரவுடிகள் சிலர், அங்கு மது குடிக்கும் நபர்களிடம், குவாட்டர் கட்டிங் கேட்டு சண்டையிட்டுள்ளனர். அப்போது ஒரு சிலர் கட்டிங் கொடுக்க மறுத்துள்ளனர். அதனால், கோபமடைந்த ரவுடி, அங்கிருந்த மது பாட்டிலை எடுத்து ஓங்கி அடித்து உடைத்தார். இதனால் பயந்து போன மதுப்பிரியர்கள், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதுதொடர்பான புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்