சென்னையில் மீண்டும் டாஸ்மாக் பார்கள்.. வெளியானது அதிரடி அறிவிப்பு

x

சென்னை மண்டலத்துக்குட்பட்ட 741 டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களில் சிற்றுண்டிகள் விற்கவும், காலி பாட்டில்களை சேகரிக்கவும் https://tntenders.gov.in/nicgep/app என்ற இணையதளம் வாயிலாக வருகிற 27-ந்தேதி பிற்பகல் 2 மணிக்குள் டெண்டரை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. சென்னை மண்டலத்துக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பார்கள் இல்லாத நிலையில், டாஸ்மாக் கடைக்கு முன்பும், கடைக்கு அருகில் உள்ள சாலை ஓரத்திலும் மதுபிரியர்கள் மதுகுடித்து வந்தனர். இந்த டெண்டர் மூலம் ஓராண்டுக்கு பிறகு பார்கள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்