கலாம் பெயர் வைத்து செய்த பகீர் சம்பவம்..டம்மியை கைது செய்த போலீஸ் | Tamilnadu

x

போளூர் அடுத்த மண்டக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த முகமது கலாம் என்பவர், பிஎஸ்சி மட்டுமே படித்துவிட்டு, மருந்தகம் நடத்தி வந்த நிலையில், அதே கடையில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மண்டக்கொளத்தூர் கிராமத்தை மக்கள், அவரிடம் மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, முகமது கலாமிடம் சிகிச்சை பெற்ற பெண் நோயாளி ஒருவர், தனது நாட்பட்ட நோய் குணமாகாததால், அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அவரிடம் இதற்கு முன்பாக சிகிச்சை பெற்ற இடம் குறித்து மருத்துவர் கேட்க, மருந்தகக் கடையில் மருத்துவம் பார்த்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அரசு மருத்துவமனை மருத்துவர் அளித்த தகவலின் பேரில், மருத்துவ அதிகாரிகள் சம்பந்தப்ட்ட மருந்தகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது தெரியவந்ததை அடுத்து, போலி மருத்துவர் முகமது கலாமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்