கூட்டுறவு சங்கம் பெயரில் மோசடி - பல ஆயிரம் கோடிகளை இழந்து வீதிக்கு வந்த மக்கள்

x

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் மக்களிடம் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டு அலுவலகங்களை மூடிச்சென்ற நிலையில், அங்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

எஸ்.எம்.சி என்ற பெயரில் குமரி உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு சங்க அலுவலகங்களை திறந்து, ஏராளமான பெண்களை பணியமர்த்தியுள்ளனர். அவர்கள் மூலம் மக்களிடம் வைப்புத் தொகை, சேமிப்பு தொகை என பல ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து விட்டு திடீரென அலுவலகங்களை மூடி விட்டு சென்றுவிட்டனர்.

ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரைத்தொடர்ந்து, குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் உள்ள எஸ்.எம்.சி நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த கோப்புகள் மற்றும் ஹார்டு டிஸ்குகளை ஆராய்ந்து பார்த்து வருகின்றனர். இதையறிந்த பொதுமக்கள் அந்தநிறுவனத்தின் முன் குவிந்து, மோசடி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்